Sunday 28 March 2021

சிந்தை திறைகொடுத்தேன்

இணுவில் கந்தசுவாமி கோயில் தேர்

 சித்திரத்தேரினில் சிரித்துநீ வரும்போது

   சிந்தை திறைகொடுத்தே னந்தா

உத்தரநாளினில் உத்தமா உனைக்காண

   எத்தரும் வருவாரோ எந்தா

இத்தரைவாழ்வினில் இருமையும் அருள்வாயின்

   இச்சைகள் இலதாகுஞ் சேந்தா

பத்தரின்நெஞ்சினில் பற்றியே இருப்பாயின்

   பழவினை மாளாதோ கந்தா

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment