Thursday 25 March 2021

வந்தருள்வாய் கந்தா!



எந்தா எனக்கு இரங்காயோ
            என் மனத்தே யுனையிருத்தி
கந்தா கந்தா எனக் கூவிடினும்
            நின்செவி வன்செவி தானோ
முந்தா வினைகள் அறுப்பாயோ
            முன்னவனே அருட் கண்ணவனே
வெந்தா போகும் இவ்வுடல்
            வந்த ருள்வாய் கந்தா
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment