Tuesday 31 January 2017

தண்டமிழ் வாழ அருள்வாயையா!


வண்டே அரற்றி வாழ்த்திசைகும்
       வயலூரின் பதிவாழும் வடிவேலா!
பண்டறிய பழவினைகள் பாரித்தழித்தும்
       பல்லுயிரும் பலவுலகும் படைத்தருளு பான்மை
கண்டே காமுற்றுக் காதலாற்பெரிதும்
       கசிந்துருகக் கற்றோம் அல்லோம்
தண்டே இசைக்கத் தாரணி யெங்கும்
       தண்டமிழ் வாழ அருள்வாயையா!

சொல்விளக்கம்
தண்டு - வீணை

இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment