Sunday 15 January 2017

காலைவெயிலிற் காத்திருந்தேன்!

புங்குடுதீவே!

நீலக்கடல் அலையிடையே
         நிமிர்ந்தோடிடும் பாய்மரம் போல்
காலக்கடல் அலையிடையில் 
         குளிர்போர்த்த சோலையாய் நிதம்
தாலமரத்து ஓலையசைந்து
         தாளமிடும் புங்குடுதீவே யுன்
கோலஎழில் காண்பதற்கு
         காலைவெயிலிற் காத்திருந் தேன்!                     
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
1. தாலமரம் - பனைமரம்

No comments:

Post a Comment