Wednesday 4 January 2017

புங்கை மக்கள் புலம் பெயர...

பனை மரங்கள் நிற்ப தென்னே!

கார் மேகம் குடை பிடிக்க
      கழனி யெங்கும் மழை துமிக்க 
நீர் நிறைந்து வயல் செழிக்க
      நில மெங்கும் வளம் கொழிக்க
சீர் கண்ட உயிர் அனைத்தும்
      சேர்ந் திருந்து உடன் வாழ
பார் எனப் பெயர் சூட்டி
      பார்த் திருந்த மனிதன் எங்கே!

ஆறு குளம் வறண்ட தேனோ
      ஆற்று மணல் போன தெங்கோ
சேறு சகதி எமக்கு ஏனோ
      செழித்து வளருங் காடு தானே
மாறு கொண்டு மரத்தை வெட்டி
      மனிதர் நிற்க நிழலும் இன்றி
பேறு என்றே பொருளைப் போற்றி
      பேணிக் காக்கும் மடமை இங்கே!

போர் என்னும் மகுடி கேட்டு
      புங்கை மக்கள் புலம் பெயர
ஊர் எங்கும் பசுமை போச்சு
      உறவைக் கூட மறந்தே போச்சு
நீர் அற்ற நிலமே ஆச்சு
      நிலம் வறண்டு பாறை ஆச்சு
பார் என்று பசுமை போர்த்தி
      பனை மரங்கள் நிற்ப தென்னே!

                                                                                   - சிட்டு எழுதும் சீட்டு 131

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment