Monday 30 January 2017

மழலை மொழிய தாகுமோ!


பெண்ணின் இன்ப வாழ்க்கையாய்
         பொழு தெலாங் கரையினும்
கண்ணின் இன்பக் காட்சியாய்
         கண்ட குதலைச் சொல்லினை
எண்ணி இன்பங் காண்பதாய்
         ஏங்கும் மனது சொல்லுமே
மண்ணின் இன்பப் பொருளெலாம்
         மழலை மொழிய தாகுமோ!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பொழுது - காலம்
கரைதல் - கழிந்து போதல்
குதலைச் சொல் - குழந்தையின் பொருளற்ற பேச்சு
மழலை மொழி - செவிக்கினிமை தரும் குழந்தையின் சொல்
மொழியது - பேசும் பேச்சு.

No comments:

Post a Comment