Wednesday 16 November 2016

விழியும் கவிதை சொல்லும்


விண்ணின் துளிகள் வீழும் போது
      விளையும் பயிரும் பசுமை காட்ட
மண்ணின் உயிர்கள் மகிழ்ந்து வாழ
      மனதின் இராகம் இசையை யூட்ட
கண்ணின் விழியும் கவிதை சொல்ல
      காணும் காட்சி கருத்தை மீட்ட
எண்ணின் இன்ப எழிலை இரசித்து
      எளிதில் வடிக்க இயலு மோஒ!
இனிதே,
தமிழரசி                                                   

No comments:

Post a Comment