Monday 7 November 2016

கன்னியரின் காதலது காட்ட!


விந்தை மிகு இவ்வுலகில் வேடுவனாய் வந்தாய்
         வேதப்பொருள் உரைத்தஅவள் வள்ளியென நின்றாள்
சிந்தை மிக வந்தருளும் செந்தில் வடிவேலவனுன் 
         செய்யதிருப்பாதம் அதை சிந்தையதில் வைத்தாள்
முந்தை மிகு வினைகளற முன்னைத் தவப்பயனாய்
         முழுமுதலாம் முருகனுன் முகமலரைக் கண்டாள்
கந்தம் மிகு சோலையதில் களவுமணம் புரிந்தாள்
         காதல்மிகு கன்னியரின் காதலது காட்ட! 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment