Thursday 5 February 2015

ஒன்னுமோ உலக வாழ்க்கை!


மனையையே எண்ணி நாளும்
        மயங்கியே திரிய வைத்து
தினையையே விதைத்து நாளும்
        தின்றிடும் வாழ்வு போல்
வினையையே விண்டு நாளும்
        விழலிலே வாழும் போது
உனையையே மறந்து போனால்
        ஒன்னுமோ உலக வாழ்க்கை
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment