Monday 26 May 2014

பள்ளி கொள்ளும் பரந்தாமா!












பள்ளி கொள்ளும் பரந்தாமா பாவி உனைப் பார்த்து
எள்ளி நகையாடவில்லை ஏது குறை உனக்கோ
துள்ளித் திரி பருவமதில் துடுக்கடக்கா காரணத்தால்
நள்ளிரவு வேளைதனில் நாரியர் தம்மோடு நீயும் 
அள்ளி வெண்ணெய் உண்டு அடிபட்ட வேளையிலே
முள்ளில் வீழ்ந்து ஆங்கு முடமாய் ஆனதனால் மெல்ல
பள்ளி கொண்டாயோ அதுவும் பாற்கடல் அதனிடை
அள்ளி வெண்ணெய்தனை அடிக்கடி உண்பாயோ!

No comments:

Post a Comment