Monday, 10 February 2025

பேரருள் பொழிவாய் பெம்மானே!

ருகா இன்பம் பரு என்றே
பகலிரவாய் பயின்ற நற்றமிழால்

முருகா வென அழைத்தழைத்து

முன்னை வினைகள் வேரறுக்க

உருகா மனஉருக்கை உருக்கி

உன் நினைவில் நித்தமிருத்தி

பெருகா இன்பப்பெருக்கை பெருக்கி

பேரருள் பொழிவாய் பெம்மானே

இனிதே,

தமிழரசி


சொல்விளக்கம்:

பருகா இன்பம் - முத்தியின்பம்

மனஉருக்கு - மனமாகிய உருக்கு[Seel]

நித்தமிருத்தி - எப்போதும் இருத்தி

No comments:

Post a Comment