பகலிரவாய் பயின்ற நற்றமிழால்
முருகா வென அழைத்தழைத்து
முன்னை வினைகள் வேரறுக்க
உருகா மனஉருக்கை உருக்கி
உன் நினைவில் நித்தமிருத்தி
பெருகா இன்பப்பெருக்கை பெருக்கி
பேரருள் பொழிவாய் பெம்மானே
இனிதே,
தமிழரசி
சொல்விளக்கம்:
பருகா இன்பம் - முத்தியின்பம்
மனஉருக்கு - மனமாகிய உருக்கு[Seel]
நித்தமிருத்தி - எப்போதும் இருத்தி
No comments:
Post a Comment