அந்நாள் எப்போ வருமென்றே
என்பே உருக நினைத் திருந்தோர்
எண்ணில் அடங்கார் இவ்வையத்தே
முன்பே வாடியபயிர் மழை பொழிய
முளைத்து எழுந்து மொட்டவிழ
இன்பே இயற்கை ஈவது கண்டே
இன்ப அன்பே உலகாள்தல் அறிவோம்.
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
தளையாய் - பயிராய்
தழைத்து - செழித்து
வாடியபயிர் - மழை இல்லாது வாடிய பயிர்
மொட்டவிழ - மொட்டு விரிய
இன்பே - இன்பத்தையே
இயற்கை - உலகத்தை வழி நடத்தும் இயற்கை
ஈவது - கொடுப்பது
கண்டே - பார்த்து
இன்ப அன்பே - இன்பத்தைத் தரும் அன்பே
உலகாள்தல் - உலகத்தை ஆள்தல்

No comments:
Post a Comment