ஒற்றியூர் அதனில் ஒண்மலர் மாலைசூட்டி
உன்கழல் நாளும் பரவு சங்கிலியார்க்காய்
சுற்றிநின்றோர் கேட்க சுந்தரத்தமிழ் தந்த
சுந்தரரின் கண் கொண்ட சுந்தரனே
கற்றிலா கற்புடைக் கண்ணப்பன் அப்பிய
கண் போதாதோ என் கண்கொண்டு
மற்றியாது மகிழ்ந்து காணத் திருவுளமோ
மனமன்றினில் ஆடும் மைந்த சொல்வாய்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
ஒற்றியூர் - திருவொற்றியூர்
ஒண்மலர் - இயற்கையான அழகுள்ள மலர்
உன்கழல் - உனது திருவடி
பரவும் - வணங்கும்
சங்கிலியார் - சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவி
சுந்தரத்தமிழ் - அழகியதமிழ்
சுந்தரரின் - சுந்தரமூர்த்தி நாயனாரின்
கண்கொண்ட - கண்ணைக் குருடாக்கிய
சுந்தரனே - அழகிய சிவனே
கற்றிலா - படித்தறியாத
கற்புடை - கல்வியறிவுடைய
கண்ணப்பன் - கண்ணப்ப நாயனார்
அப்பிய - ஒற்றிவைத்த
மற்றியாது - மற்று + யாது/மற்றையதுஎன்ன?
திருவுளமோ - விருப்பமோ
மனமன்று - மனமேடை
ஆடும் - இதயத்துடிப்பாய் ஆடுகின்ற
மைந்த - மகனே
No comments:
Post a Comment