சிவனவன் திருக் கேதீச்சரத்தான்
செந்தமிழோர் போற்றும் செய்யுளி லுளான்
அவனவன் எண்ணும் எண்ணத்துள் உளான்
அணுமுதல் அண்டம் அனைத்து முளான்
அயனவன் அரியவன் காணா நீள்
அனலுருவாய் முகிழ்ந்த முதல்வன்
சிவனவன் சிவ ராத்திரியான் எம்
சிந்தை நிறைய பண்ணிய புண்ணியமேது
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
சிவனவன் - சிவனாகிய அவன்
திருக்கேதீச்சரத்தான் - திருக்கேதீச்சரத்தில் உள்ளான்
எண்ணும் - நினைக்கும்
அண்டம் - univers
அயனவன் - பிரம்மாவும்
அரியவன் - விஷ்ணுவும்
காணா - பார்க்க முடியாமல்
நீள் அனல் - நீண்ட தீ
உருவாய் - வடிவாய்
முகிழ்ந்த - தோன்றிய
முதல்வன் - எல்லாவற்றுக்கும் காரணன்
சிவராத்திரியான் - சிவராத்திரிக்கு உரியவன்
நிறைய - நிறைந்திருக்க
பண்ணிய - செய்த
புண்ணியம் - நல்வினைப் பயன்.
ஏது - என்ன?
குறிப்பு:
சிவராத்திரியான இன்று திருக்கேதீச்சரத்து மகாசிவலிங்கம் முன்பு உருவான பாமாலை இது.
No comments:
Post a Comment