Wednesday 18 January 2023

பார்ப்போர் யாரும் காணாமே


பாரும் விண்ணும் தொழ நின்றாய்
     பார்ப்போர் யாரும் காணாமே
ஊரும் உலகும் அழ நின்றாய்
     உவப்போர் யாரும் இல்லாமே
நீரும் நெருப்பும் விழ நின்றாய்
     நினைப்போர் யாரும் அறியாமே
சீரும் சிறப்பும் எழ நின்றாய்
     சிதைப்போர் யாரும் சிதையாமே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment