Thursday 22 December 2022

நுடங்கும் ஒளியே!


சிற்றம்பலவா என்று நின்சீரடியே நம்பி

சிந்தித் திருப்போர்தம் சிந்தையுள்ளே

முற்றுமுழுதாய் நிறைந்து மூர்த்தியுன் வடிவு

மொய்ப்புடன் காட்டும் மென்னியலே

வற்றாயின்ப வெள்ளத்து ஆழ்த்தி வாழ்விக்கும்

வாழ்வே வாராநெறி தனையேஎ

கற்காமுறையிற் கற்றிடவைக்கும் கற்பனைப் பொருளாய்

காண்பதற்கரிதாய் நுடங்கும் ஒளியே!

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

மொய்ப்பு - பெருமிதத்துடன் ஆன வலிமை

மென்னியல் - மென்மையான இயல்பு

வாராநெறி - மீண்டும் பிறந்து வராத வழி

கற்காமுறை - கற்று அறியாத முறையில்

கற்றிட வைக்கும் - கற்க வைக்கும்

நுடங்கும் - நுட்பமாக ஒடுங்கும்

No comments:

Post a Comment