Saturday 31 December 2022

வாழிய என்றே 2023ஐ வரவேற்போம்


எந்தமிழர் எங்கும் ஏற்றமாய் வாழ

  எம்நெஞ்சி லன்பும் இன்பமும் பெருக

சொந்தமும் பந்தமும் சேர்ந் தணைக்க

  செவ்விதழ் மலர சிரித்திடும் பாலகர்

தந்தனத் தோம் என்று பாட்டிசைக்க

  தளிர் மேகம் தண்மழை தூவ

வந்தனம் கூறி வாழிய என்றே

  வந்திடும் புத்தாண்டை வரவேற்போம்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment