Thursday 5 May 2022

மறையது பகர்வாய் மறையோளே!

ஒருவளென நினைந்து உருகு மடியவர்

  உளம் உறை உமையோளே

திருவென வந்து திகழ்விழி மலர

  திருவருள் பொழியும் அழகோளே

பெருவரை வெற்பின் அரையன் றன்மகளாய்

  பிறந்தருள் புரிந்த இறையோளே

முருகென நின்று முறுவலது மிளிர

  மறையது பகர்வாய் மறையோளே

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

சொல்விளக்கம்

ஒருவள் - ஒருத்தி

உமையோள் - உமையவள்

திருவென - இலட்சுமி

திகழ்விழி - ஒளிபொருந்திய கண்

மலர - விரிய

அழகோளே - அழகையுடையவள்

பெருவரை - மாமேரு

வெற்பு - மலை

அரையன் - அரசன்

இறையோள் - இறைவி

முருகென - அழகாக

முறுவல் - சிரிப்பு

மிளிர - பற்கள் ஒளிர

பகர்வாய் - சொல்வாய்/உணர்த்துவாய்

மறை - வேதம் [அறம், பொருள், இன்பம், வீடு]

மறையோள் - வேதங்களை அறிந்தவள்.

No comments:

Post a Comment