Wednesday 18 May 2022

காத்தருள் கலைமானே!



பாநீ பாநீ யென்றே பாவலர் பாடிய

  பழந்தமிழ்ச் சுவைப்பாகே

வாநீ வாநீ என்று அழைப்போர்

  வாக்கினில்வந் தமர்மாதே

தாநீ தாநீ என நாளும் அழுது

  தொண்டர்தொழு தேத்துதேனே

காநீ காநீ யெனக் கதறு அடியரைக்

  காத்தருள் கலைமானே

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment