Thursday 19 May 2022

தீராத தீர்வு

 

தீராத தீர்வுக்கு தீர்வெழுத
திரண்டு எழுந்த மாவீரரே!
போருக்குப் போர் என்று பாய்ந்தேகியே
பகைப்பாசறை தனையே பந்தாடினீர்
ஊருக்கு ஊராக உமைத்தேடியே
ஊடாடு மொற்றரை ஒட்டாட்டினீர்
வேருக்குக் குருதிப் புனலோடிட
வேங்கைகள் நாமென்றே மார்தட்டினீர்
கூராகத் துண்டாடி உடல்வீழினும்
குலமானமே பெரிதென்று வென்றாடினீர்.
 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment