Monday 11 April 2022

பைந்தமிழ்த்தேனை பொழிவாய்!


அன்றே உனக்காட்பட்டே அவனிமிசைப் பிறந்தேனை

  அன்பெனும் கருணைப்பெருக்கால் அணைத்திடும் அன்னையே

நன்றே செய்வாய்யென்றே நம்பியே இருந்தேனை

  நையப்புடைத்து நலித்தெடுத்து நயப்பதும் நன்மையே

இன்றே உணர்தேனுன்றன் இன்னருட் பெருந்தேனை

  இயற்கையே காட்டிடக்கண்டே மகிழும் என்னையே

பொன்றே போகுமுன்னே வந்து பைந்தமிழ்த்தேனை

  பொழிவாய் என்சிந்தை உள்ளே நிறைத்தே!
இனிதே, 
தமிழரசி. 

No comments:

Post a Comment