Friday 11 June 2021

எனைநாடி வாராயோ!


வினை பேணி வினை பேணி

  வினையாலே வெந்தழியா

உனைப் பேணி உனைப் பேணி

  நைந்துருக மனந்தந்த

உனைக் காண உனைக் காண

  உள்ளுருகி உளம்வாடும்

எனைக் காண எனைக் காண

  எனைநாடி வாராயோ

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment