Sunday 16 May 2021

கனவிலும் காட்சி தாராய்!



உள்ளமே கோயில் கொண்டாய்

     உணர்வினில் கலந்து நின்றாய்

கள்ளமாய் மறைந்து வாழ்வாய்

     கனவிலும் காட்சி தாராய்

பள்ளமே பாயும் நீராய்

     பரிந்து வருதல் கண்டால்

துள்ளுமே எனது ஆவி

     தொடர்வாய் எனும் உண்மையாலே


இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment