Wednesday 28 April 2021

தண்ணளி தருவாயென்று


பழ முதிரும் சோலையிலே

   உனைக்  கண்டேன் அன்று

பழ வினைகள் போக்கென்று

   பரிந்து நின்றேன் இன்று

கழ லடிகள் தொழுதெழுந்து

   கதறு கின்றேன் நன்று

தழ லிடையே உருகுகிறேன்

   தண்ணளி தருவா யென்று

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment