Wednesday 5 December 2018

நின் எழில் காணேனோ!


                    பல்லவி
காணேனோ! நின் எழில்
காணேனோ! கந்தனே!
                                     - காணேனோ
                அநுபல்லவி
நாணேனோ! உன் முன்
நாணேனோ! சித்தனே!
                                    - காணேனோ
                சரணம்
நானேனோ உன்னை 
நினைந்து நலிகிறேன்
நீயேனோ என்னை
நினைந்து நளிக்கிறாய்
தீயேனோ முன்னை
தீயால் அழிகிறேன்
மாயேனோ பின்னை
மறுமை தீயவே
                                    - காணேனோ
இனிதே,
தமிழரசி

சொல்விளக்கம்:
நலிகிறேன் - மெலிகிறேன்
நளிக்கிறாய் - வருத்துகிறாய்
முன்னைத்தீயால் - முற்பிறப்பு வினைப்பயன்
மாயேனோ - அழிந்து போதல்
பின்னை மறுமை - வர இருக்கும் பிறப்பு
தீயவே - இல்லாது எரிந்து நீறாகித் தீர்ந்து போதல்

No comments:

Post a Comment