Friday 21 December 2018

இன்பம் என்று தணியுமோ!



மரம்படு துயரம் அறியா
          மூர்க்கராய் மனிதர் தாமும்
சிரமென எழுந்து நின்று
          செழுங் குளிர்மை தருநல்
மரங்களை செடி கொடிகளை
          மனமிக மகிழ்ந்தே தம்
நரம்பெழு கைகள் கொண்டு
          நரநர வென வெட்டி
இரக்கமதின்றி வீழ்த்தி மகிழ்
          இன்ப மென்று தணியுமோ!
இனிதே,
தமிழரசி.

1 comment: