Monday 3 December 2018

மகாமேரு மலர்


வெண்ணிற மகாமேரு மலர்

மனிதர்கள் தமது வாழ்நாளில் பார்க்க முடியாத மலர்களில் இதுவும் ஒன்று. குறிஞ்சிமலர் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும். ஆனால் மகாமேரு மலர் 400 வருடங்களுக்கு ஒருமுறை பூக்குமாம். இம்மலர் இந்த வருட [2018] ஆவணி மாதத்தில் பூத்திருந்தது. இப்பூவைத் தேடி மேருமலைக்குச் செல்ல வேண்டாம். 


சதுரகிரி மலை

மதுரை மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர்[ஆண்டாளின் ஊர்] இருக்கிறது. அதிலிருந்து 10கிமீ தூரத்தில் சதுரகிரி மலை உள்ளது. சித்தர்களும் மூலிகைகளும் இருக்கும் இடம் சதுரகிரி மலையாகும். ஆடி அமாவாசை அன்று அங்குள்ள அருவியில் நீராடுவர். அத்தகைய சதுரகிரி மலையில் மகாமேரு மலரும் பூத்தது. எனது சித்தி அனுப்பி வைத்த மகாமேருமலரின் படத்தை உங்களுடன் பகிர்கிறேன். 

இம்மலரை மகாமேரு புஸ்பம் என்றும் அழைப்பர். குறிஞ்சி மலர் போல் நம் குறிஞ்சி நிலத்திற்கு சொந்தமான மலர் என்கின்றனர்.
இனிதே,
தமிழரசி. 

No comments:

Post a Comment