Tuesday 25 October 2016

நினைந்து வாழும் உலகே!


உமதன்பின் எல்லை உணர்ந்தறிவார் யாரோ
          உவப்பிலா அந்த உணர்வரிய
எமதன்பின் எல்லை ஏதென்றறிய ஒண்ணா
          ஏழையேம் மாசு அறுத்து
தமதன்பின் தன்மை தன்னை உவந்து 
          தந்தருளு தாண்டவ ராச
நுமதன்பின் தன்மை தன்னால் நினை
          நினைந்து வாழும் உலகே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment