Monday 19 September 2016

மேகம் மீண்டும் மழையாய்த் தருமே!


போகம் வேண்டி பொழிலை அழித்தோம் 
காகம் பொறுக்கக் கல்லும் இல்லை
காகம் குந்தக் குச்சும் இல்லை
தாகம் தீர்க்கத் தண்ணீர் இல்லை
தாகம் கொண்டு தண்ணீர் தேடி
மோகம் மிக்க மானுடர் நாமும்
மோதி அழியும் மரணம் வரமுன்
தேகம் வேர்க்க மரங்கள் நடுவோம்
தாகம் தீர்க்கும் அமிழ்தாம் நீரை
மேகம் மீண்டும் மழையாய்த் தருமே!
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு 125

1 comment: