Monday 5 September 2016

மாண்புடன் வாழவென்றே அருள்புரிக!


பெண்ணுலகின் பெருநிதியாம் பெருமாட்டி
          பெற்றுகந்த பேரருளே பெம்மானே
விண்ணுலகு விட்டிங்கு வந்தருள்வாய்
          விநாயகனே வேண்டுவார்க் கீவதற்கே
தண்ணிலவும் தான்பொழியும் தண்ணொளியை
          தரணியெலாஞ் சிந்துமது போலவே
மண்ணுலகில் பிறந்துவாழ் மனிதரெல்லாம்
          மாண்புடன் வாழவென்றே அருள்புரிக!

No comments:

Post a Comment