Sunday 30 November 2014

அன்பெனும் இழை!


அன்பெனும் இழையில் கட்டுண்டோம்
ஆருயிர் ஒன்றென ஒட்டுண்டோம்
துன்மதிக் கோபத்தை விட்டிட்டோம்
தூயநல் உள்ளத்தை பெற்றிட்டோம்

நண்பெனும் நாணில் கட்டுண்டோம்
நற்றமிழ் அறிவினில் ஒட்டுண்டோம்
பண்பெனும் பான்மையை பெற்றிட்டோம்
பழந்தமிழ் மேன்மையை கற்றிட்டோம்
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு 94

No comments:

Post a Comment