Friday 28 November 2014

ஆசைக்கவிதைகள் - 98


நித்தம் நித்தம் நாத்து நட்டு
நட்டகூலி தாவே யென்ன
சத்தம் கித்தம் போடாதே யென்னு
சண்டித்தனம் பண்ணுறானே!

பெத்தபுள்ள கஞ்சி கேட்டு
புரண்டு இங்க அழுகிறானே!
பெத்தவயிறு எரியு தையோ
புரண்டு படுத்தும் தூக்கமில்ல

பொறுக்கி வைத்த நாலுகாசை
பரணின் மேலே காணவில்ல
சீனக்காரன் கூவி வித்த
சீனிமிட்டாய் ஆகிப்போச்சோ!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment