இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Saturday, 29 November 2025
வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே!
Saturday, 8 November 2025
எம் நிதியே! நானில்லா நேரத்தில் எங்குற்றாய்!
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் தம்பி - அமரத்துவம் அடைந்த முத்துக்குமாரு பாலசுந்தரம், புனிதவதி பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மகளும் திரு சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் எனது ஆருயிர்த் தங்கையுமான சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03/11/2025 திங்கட்கிழமை நயினை நாகபூசணி அம்மன் திருவடித் தாமரைத் தேனுடன் கலந்தார். அப்போது நான் நம் நாட்டிற்குச் சென்றிருந்ததால் அந்நிகழ்வு எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்னை ‘தமிழ்’, ‘தமிழ் அக்கா’ என்றெல்லாம் அழைத்துக் கொஞ்சி மகிழ்ந்த தங்கையின் உடலைப்பார்க்கப் போகிறேன். தாய்த் தாய் தேடிச் செல்லும் இவ்வுலகின் மாறாத சட்டம் இது. எனினும் மாபெரும் வெற்றிடமே என்னுள் எஞ்சி நிற்கிறது. நயினை நாகபூணிசக்கு எம் குடும்பத்து ‘நிதி’ உடனே தேவைப்பட்டதோ! வைப்பில் இட்டாளோ!! எங்கே தேடுவேனோ!!!
இனிதே,
தமிழரசி.
Monday, 22 September 2025
கலைமகளே கருணைக்கண் பாரம்மா!
Sunday, 21 September 2025
வாழ்வாங்கு வாழ்வோர்!
Monday, 1 September 2025
வித்தக விநாயக!
Friday, 1 August 2025
மயக்கும் தமிழ்
Saturday, 5 April 2025
வியந்து நாம்காண விரைந்து நீயாடு
மணிமிடற் றந்தண மயக்கங்கள் போக்கவே
மனதினிற் தங்கியே மாயையை காட்டவே
அணிநிழல் காட்டினை அரங்கது ஆக்கியே
அனைத்துயிர் வாழவே ஐம்பூ தமொடு
பணிவளை குலுங்கிட பறையது ஆர்ப்ப
பலவிசை இயம்ப பல்லுருவம் பெயர்த்து
வேணிமுடித்த சடை விண்திசை அலம்ப
வியந்து நாம்காண விரைந்து நீயாடு
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
மணிமிடறு - நீலமணி போன்ற கழுத்து [நஞ்சுண்டதால்]
அந்தணன் - செந்தன்மை பூண்டொழுகும் சிவன்
மயக்கங்கள் - தடுமாற்றங்கள்
மாயை காட்டல் - பொய்யா? மெய்யா? எனும் உண்மையைக் காட்ட
அணிநிழல் காடு - மரநிழலால் செறிந்த காடு
அரங்கம் - மேடை
அனைத்துயிர் - எல்லா உயிரும்
ஐம்பூதம் - நிலம், தீ, நீர், காற்று, வான்வெளி
பணிவளை - பாம்பாலான காப்பு
பலவிசை இயம்ப - பலவகை இசைகளின் ஒலி எழ
பல்லுருவம் பெயர்த்து - பல உருவங்களை மாறி மாறி எடுத்து
வேணிமுடித்த சடை - முடித்த கூந்தல் சடை
விண்திசை அலம்ப -வானத்துத் திசையெங்கும் அலைய
வியந்து - வியப்போடு






