மடமஞ்ஞை உடனாக மயிற்றோகை விரித்தாட
மாலைக் கதிரொளியில் மதிமயக்கும்
மடத்துவெளி தன்னிலுறை வயலூரா
தடமஞ்ஞை தடம்நாடி தனையர் செல்ல
திரைவந்து தடமழிக்கும் ஊரதீவுமுனதாக
தென்றல் சங்குபுக்கு தீம்பண்ணிசைக்க
மடமங்கையர் மனங்களித்து மருதயாழ் மீட்ட
முன்னையோர் முகம்மலர்ந்து கேட்டிருந்த
முத்தமிழின் சுவைநிறை புங்குடுதீவில்
வடபால் வடிவேலாய் வீற்றிருந்தருள் செல்வ
வடிவேலனே விடிவெள்ளியாய் மிளிர்ந்தே
வேண்டுவோர்க்கு வேண்டுவன தெரிந்தேநல்கு!
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
மடமஞ்ஞை - பெண்மயில்
மயில் - ஆண்மயில்
கதிரொளி - சூரிய ஒளி
மதிமயக்கும் - அறிவைமயக்கும்/ வியப்பைத்தரும்
தடமஞ்ஞை - கடற்கழியில் வாழும் மயில்
தடம் - சுவடு
தனையர் - பிள்ளைகள்
திரை - கடல் அலை
தடமழிக்கும் - சுவட்டை அழிக்கும்
சங்குபுக்கு - சங்கில் புகுந்து
மடமங்கையர் - இளமங்கையர்
மருதயாழ் - வயலும் வயல்சார்ந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் வாசித்த இசைக்கருவி.
மருதப்பண் - தற்போது கரகரப்பிரியா இராகம்
வடபால் - வடதிசையில்
வடிவேலாய் கூரான/அழகான வேல்வடிவில்
விடிவெள்ளியாய் - விடிகிறது என்னும் நம்பிக்கையைத் தரும் வெள்ளிபோல்
தெரிந்தே நல்கு - தெரிந்து எடுத்துத் தருக.
குறிப்பு:
"சடாச்சர மந்திர சொரூபா சிவசிவ தாண்டவ நந்தினி பாலா

No comments:
Post a Comment