Saturday 17 February 2024

ஏழைகள் கண்ணீர் துடைத்தருளே!


 உந்தன் அடி தொழ நினைந்தே 

  உருகிடும் அன்பர் உளம் உறைபவளே

கந்தம் கமழுநல் கமல மலர்ப்பதம்

  கண்டு களித்து கலங்குவ தெப்போ

சந்தம் மிகுசொற் செந்தமிழ் பாடல்

  சற்றே சாற்றிடும் வேளை வந்து

எந்தன் உயிர் ஏகாம்பரையாய் நின்று

  ஏழைகள் காண்ணீர் துடைத் தருளே! 

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

உந்தன் - உனது

உருகிடும் - மனம் நெகிழ்தல்

உளம் - உள்ளம்

உறைபவள் - இருப்பவள்

கந்தம் கமழ்தல் - மணம் வீசுதல்

கமல மலர் - தாமரை மலர்

பதம் - பாதம்/அடி

களித்து - மகிழ்ந்து

சந்தம் - குறித்த ஓசை மிகுந்து வருதல்

சற்று - கொஞ்சம்

சாற்றிடும் - சொல்லும்

வேளை - பொழுது/நேரம்

No comments:

Post a Comment