Wednesday 24 August 2022

எந்தமிழர் யாவர்க்கும் என்றும் அருள்வோனே!


சித்தி விநாயகனே சித்தத் தமர்வோனே
              செந்தி லாண்டவன் சந்நிதி யிருப்போனே

பக்தி தருவோனே பழவினை தீர்ப்போனே

              பாவியர் நெஞ்சிலும் பரிந்துவந் துறைவோனே

முத்திக்கு வித்தாகி முளைத் தெழுந்தோனே

  மூவர்க்கும் முதல்வனாய் முன்னின்று காப்போனே

எத்திக்கும் தொழ நின்ற ஓங்காரவடிவனே

  எந்தமிழர் யாவர்க்கும் என்றும் அருள்வோனே

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment