Sunday 14 August 2022

ஆனந்த நடனம் கண்டேன்


ஆனந்த நடனம் கண்டேன் அன்றொரு நாள் 
            அந்திப் பகல் அதனில் என்பக்கலில் நின்றே
வானந்தக் கருமுகில் கண்டு வண்ண தோகை
            விரித் தாடும் மாமயில் மீ திவர்ந்து
தானந்த மில்லா தன்மை யாளன் தண்டாயுதன்
            தன்னந் தனியனாய் யெனை நாடி வந்து
தேனந்த சுவையூட்டு தமிழ்  பாவின் இசை
            தேர்ந்து தெளிந்து தந்து மகிழ்ந் தனனே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
அந்திப்பகல் - பகல் முடியும் நேரம் 
வானந்தக்கருமுகில் - வானத்திலுள்ள கருமுகில்
மாமயில் - பெரிய மயில்
இவர்ந்து - ஏறி
தானந்தமில்லா - முடிவில்லாத
தண்டாயுதன் - முருகன்
தேனந்த - தேன்போன்ற
தேர்ந்து - ஆராய்ந்து
தெளிந்து தந்து - தெளிவடையும்படி தந்து

No comments:

Post a Comment