Sunday 7 February 2021

மாவலிகங்கையில் சோழமன்னன்

மாவலிகங்கை

இலங்கை வரலாற்றில் சங்ககாலம் தொடக்கம் சேர, சோழ, பாண்டியர்களாகிய தமிழ் மூவேந்தரின் தொடர்புகளைக் காணலாம். முதலாம் இராசராச சோழன் கி பி 993ல் இலங்கையின் வட பகுதியைக் கைப்பற்றினார். அப்போது அநுராதபுரம் இலங்கையின் தலைநகராக இருந்தது. பொலநறுவையைத் தலைநகராக்கி அதற்குஇராஜராஜ ஜனநாத மண்டலம்எனப்பெயர் சூட்டினார். எட்டு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு இருந்த சோழநாடு இராஜராஜ ஜனநாத மண்டலத்துடன் சேர்ந்து ஒன்பது மண்டலமாகியது. அதன் பின்னர் மகன் முதலாம் இராஜேந்திர சோழன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆட்சி செலுத்தினான். அப்போது மாவலிகங்கை அவன் ஆட்சிக்குள் இருந்தது.

புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்த வீரமாதேவிமாவலி கங்கையில் இருந்து இரத்தினங்களையும் முத்துக்களையும் சோழேசன் அள்ளிச் சென்றான்என்கிறாள். அந்தச் சோழேசன் முதலாம் இராசராச சோழனா? அன்றேல் முதலாம் இராஜேந்திர சோழனா என்பது தெரியவில்லை. இரத்தினங்கள் மலையில் பிறப்பன.  அவை மலையில் இருந்து வீழும் அருவியோடு மாவலி கங்கையில் உருண்டோடி வரும். ஆனால் முத்துக்கள் வருமா? நன்னீர் ஆற்றில் வாழும் சிப்பிகள் முத்துக்களை ஈனும். இன்றும் வட அமெரிக்காவில் ஓடும் மிசிசிப்பி ஆறு போன்ற ஆறுகளில் முத்துக்கள் பிறக்கின்றன. 

காளமேகப்புலவரும் இந்நிகழ்ச்சியை சோழேசன் என்றே பாடியுள்ளார். காளமேகப் புலவர் வசை பாடக் காளமேகம் என்று பெயர் பெற்றவர். அதற்கமைய எவரையும் புகழ்வது போல இகழ்வதும் உண்டு.

காவலன் எங்கள் கனவைப்பாஞ் சோழேசன்

மாவலி கங்கை மணிவாரி - ஆவனலென்

றப்புளங்கை தோய்க்க வதில்வா ரியமுத்தை

கொப்புளமென் றூதுங் குரங்கு

அதாவது

"காவலன் எங்கள் கனகவைப்பாம் சோழேசன்

மாவலி கங்கை மணிவாரி - ! அனலென்று

அப்புளங்கை தோய்க்க அதில் வாரிய முத்தை

கொப்புளம் என்று ஊதும் குரங்கு

எங்கள் காவலனும் பொற்செல்வம் போன்ற சோழமன்னன் மாவலி கங்கைக் கரை மணிகளை வாரி அள்ளினான். அவை நெருப்புத் தழல் போல் தெரிந்ததால் ! அனல் எனக்கூறி மாவலிகங்கை நீரினுள் கையை விட்டான். அக்கையில் வாரிய முத்துக்களை நெருப்புச் சுட்ட கொப்புளம் என குரங்கு ஊதியதுஎன்கிறார். ஈழத்துக் குரங்கேபூஎன ஊதித் தள்ளும் முத்தையா வாரி அள்ளிக் கொண்டுவந்தார் என்ற இகழ்ச்சியும் இப்பாடலில் இருக்கிறது.

பாண்டியன் சீமாற சீவல்லபனும் மனைவியும்

வீரமாதேவி தனது மூதாதையரான பாண்டியன் சீமாற சீவல்லபன் இலங்கையின் பொன்னையும் இரத்தினங்களையும் முத்துக்களையும் மட்டுமல்ல புங்குடுதீவு கள்ளியாற்றங் கரையிலிருந்து அகிலையும் முத்தையும் பவளத்தையும் அள்ளிச் சென்றது போல சோழர்கள் மாவலி கங்கையில் மணிகளையும் முத்துக்களையும் வாரிச் சென்றார்கள் என்கிறாள். முதலாம் இராசராச சோழனுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே சீமாற சீவல்லபன் ஈழத்துச் செல்வங்களை அள்ளிச் சென்றான் என்பதை சிம்மனூர் செப்பேடும் சொல்கிறது.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment