Sunday 6 September 2020

நானிலம் எங்கும் நோயறவே!



பூமகள் தேவி பதந்தனைப் போற்றி

பண்ணினில் பாடல் நவின்றிட வாரீர்

காமகள் காளி களத்திடை நின்று 

காட்டிய வீரம் கற்றிட வாரீர்

பாமகள் வாணி பயின்றநல் வீணை

பக்குவம் தன்னைப் படித்திட வாரீர்

நாமகள் தாளிணை நயந்திட வாரீர்

நானிலம் எங்கும் நோய் அறவே!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment