Monday 7 September 2020

முருகா என்று ஒருமுறை சொன்னேன்

 

முருகா என்று ஒருமுறை சொன்னேன்

            உருகிடும் உள்ளத் துணர்வுடன் ஒன்றி

பருகிடத் தந்தாய் பைந்தமிழ் இன்பம்

            பழமுதிர் சோலைக் காட்டகம் தன்னில்

திருநிறை முதுமையும் திகழொளிர் மேனியும்

            துலங்கிட வந்த பழமையை எண்ணி

வருவாய் என்றே வயலூர் வந்தேன்

            வந்தருள் தருவாய் வயலூர் மன்னி!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment