Sunday 1 December 2019

வேலொடு வந்தான்




மாவிலைப் பந்தரின் தோரணம் ஆட
மரகத வீணையின் பண்ணொலி கேட்க
ஆலிலைத் துயின்றவன் காவிலை நண்ணி
ஆனந்த வெள்ளத்து அருவியில் மூழ்கி
மூவிலைச் சூல முக்கணன் மகனாம்  
முருகனை எண்ணி முறையினிற் றொழுதும்
கோவிலைக் காணா கருத்தழிந் தழவே
கோவண ஆண்டி வேலொடு வந்தான் 
இனிதே,
தமிழரசி


No comments:

Post a Comment