Saturday 9 July 2016

திருவோட்டு மரம் எங்கே?


திருவோட்டு மரம் எங்கே
          திருநீலகண்டர் வாழ்வில்
திருவருள் செய்ய என்றே
          திருநீலகண்டத் திறைவன்

திருவோடு கொடுத்தார் என்பர்
         திருவோடு தூக்கும் சுவாமியர்
திருப்பாதம் கழுவும் பக்தர்
         திருவோட்டு மரம் வளர்க்கும்
திருப்பணி செய்யா விடின்
         திருவோட்டு சுவாமி மார்கள்
திருவோடு இன்றி நாளும்
         திருவருள் செய்யா திருப்பர்
திருவோட்டு மரம் வளர்த்தித்
         தரையைக் காத்தல் நன்றே!
இனிதே,
தமிழரசி.
                            திருவோடு                             

குறிப்பு:
திருவோடு என்பது ஒரு மரத்தின் விதையில் உள்ள ஓடாகும். தேங்காய்ச் சிரட்டையைப் போன்றது. நல்ல நிழலைக் கொடுக்கும் அந்த மரத்தை திருவோட்டு மரம் என்பர். இந்த மரத்தை வளர்ப்பார் இல்லாததால் அழிந்து வருகிறது. இம்மரத்தை வளர்த்து ஓட்டில் கோயில்களுக்கு பூ எடுத்துச் செல்லலாம், மலர்ச்செடிகளை வளர்க்ககலாம், மரக்கறிகளை, பொருட்களை போட்டு வைக்கலாம். திருவோட்டுக் காய் 50 செ.மீ நீளம் உடையது. உங்கள் கற்பனைக்கு ஏற்ப அழகுப் பொருட்கள் செய்யலாம். மரத்தை வெட்டிக் கப்பல் கட்டப் பயன்படுத்தலாம். 

No comments:

Post a Comment