Wednesday 30 March 2016

ஷீனோ கட்டும் கோட்டை!


சிற்பி யென இருந்து 
         சின்னக் கரம் தன்னால்
மற்ற எண்ணம் இன்றி
         மயன் அவன் ஆக
சுற்றி ஓடும் வண்டி
         சுழன்று வீசும் தீயை
பற்றி எரியுந் தீயும்
         பகைவர் தமைக் காய்க்க
தொற்றி ஏறும் பகைவர்
         துடித்து வீழ்வர் நிலத்து
கற்ற தெலாம் நினைந்து
         கற்பனை யைக் கலந்து
ஷீனோ கட்டும் கோட்டை
         கொடி பறக்கும் கோட்டை
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment