Tuesday 29 March 2016

அரற்றி மகிழ்வேன்



அழகர்மலைக் கோயிலிலே ஆடி மகிழ்ந்தேன்
            அங்கே கள்ளழகன் காட்சி தர
                        ஆடி வந்தாண்டி

குழகனவன் குறும்பதனை பார்த்து மகிழ்ந்தேன்
            குண கடலும் குட கடலும்
                        குமைய நின்றாண்டி

மழகர்மலை மயிலிறகை சூடி மகிழ்ந்தேன்
            மன மகளாம் எனைக் கண்டு
                        மயங்கிப் போனாண்டி

அழகர்மலை வாயிலிலே கூடி மகிழ்ந்தேன்
            அனு தினமும் அவன் பெயரை
                        அரற்றி மகிழ்வேன்


No comments:

Post a Comment