Friday 29 January 2016

ஏறே சொல்வாய்!



கந்தன் என்றும் கடம்பன் என்றும்
        கதறுவோர் தம்மை நீத்தும்
எந்தை என்றும் ஏழை என்றும்
        ஏங்குவோர் தம்மைப் பார்த்தும்
பந்தம் என்றும் பாசம் என்றும்
        பதறுவோர் தம்மைக் ஏய்த்தும்
உந்தன் உள்ளம் உவப்ப தேனோ
        உமையவள் ஏறே சொல்வாய்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment