Tuesday 19 January 2016

கொடுத்தருள் பெரும் வள்ளலே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

கோணை நாயகர்திருப் பாதமலர் தழுவியே
         குளிர்ந்து குழையும் மாவலி
கோடானு கோடி அலைக்கரங் கொண்டுனைக்
         கும்பிட்டு வாழ்த்தும் உததி
வேணுகானஞ் செய்து ஆடியும் பாடியும்
         விரும்பித் துதிப்பன புட்கள்
வேதாந்தி போல்நின்று கண்ணீர் சொரிந்தன்பு
         மலர் தூவுமே மரங்கள்
காணுமிவ் வுலகினைக் கட்டுமைம் பூதமும்
         கடன்மையைச் செய்து வக்கும்
கர்த்தனே உடுக்களும் மதியமும் இரவியும்
         கண்கொண்டு பார்க்கு மையா
கோணை நாயகயிந்த மானிடர்கள் அறிவென்ன
         கும்பிட நின்னருள் வேண்டுமாம்
கொடுத்தருள் சுதந்திரம் சுயமதி செல்வம்
         கொடுத்தருள் பெரும் வள்ளலே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment