Wednesday 13 January 2016

முதுமையின் சாரம்


இலை உதிர் காலம் முதுமையின் கோலம்
கலகல என்று காற்றினி லசைந்து வீழும்
இலை சொல்லும் சேதியை மனமது ஆயும் 
இலை மெல்லப் பழுத்து சருகது ஆகும் 
நிலை தனைக் கண்டு மனமது நகைக்கும்  
தலை மயிர் நரைத்து தசைகளும் தளரும்
சிலை என இருந்த சித்திர மேனியும்
அலை அலை ஆக அடங்கி ஒடுங்கும்
தலை அது சாய்க்கத் தோளினை தேடும்
நிலை தடு மாறும் முதுமையின் சாரம்.                                                  
இனிதே 
தமிழரசி.
                                                                      

No comments:

Post a Comment