Tuesday 1 October 2024

முதுமை என்பது ஒரு கவிதை

 


முதுமை என்பது ஒரு கவிதை

            முந்தைப் பிறவிதனின் சுவையாகும்

பதுமை என்றே நின்ற உடலம்

            பாங்காய்க் கொஞ்சம் தளரும்

அதுமெய் என்பதை மெல்லச் சுருக்கி

            அறிவை நன்றாய் வளர்க்கும்

பொதுமை என்பது அதன் பெருமை

            பொழுதும் இனிமைதனைச் சேர்க்கும்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment