Wednesday 26 June 2024

உள்ளம் மாண்டதுவே

 

அவமே நாளைக் கழித்துகந்து
           ஆங்காரத்துள் ஒளித்திருந்தே
பவமே புணரும் காரணத்தால்
           பாவப்புணையுள் வீழ்ந்திருந்தேன்
தவமே அறியாத் தடுமாறி
           தானெனஎண்ணி மகிழ்ந்திருந்தே
சிவமே உணராச் சிந்தையதாய்
          சோர்ந்தெனதுள்ளம் மாண்டதுவே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
அவம் - வீணாக
கழித்து - போக்கி
உகந்து - மகிழ்ந்து
ஆங்காரத்துள் - செருக்கினுள்
ஒளித்திருந்தே - மறைந்திருந்தே
பவம் - பிறப்பு
புணர்தல் - பொருந்துதல்
பவமே புணரும் - பிறப்புகளுடன் சேரும்
பாவப்புணை - பாவமாகிய தெப்பத்துள்
மாண்டதுவே - இருண்டது/அழிந்தது

No comments:

Post a Comment