Friday 25 November 2022

தருந்தமிழுக்கு ஈடேது!


எனை ஆளும் சிவனவன்

  என் சிந்தை யுள்ளே

தினைப் போதும் அகலாதே

  துன்ப மெனும் புடமிட்டு    

வினை யாலே தடுமாறி

  வெய் துயிர்த்து வாடாது

தனையே நினைக்க வைத்து

  தருந் தமிழுக் கீடேது

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

தினைப் போதும் - சிறிதளவு நேரமும்

அகலாது - விட்டு நீங்காது

புடமிட்டு - குற்றங்களை நீக்கி தூய்மை செய்தல்

வெய்துயிர்த்து - ஆற்றாமையால் வரும் நெடுமூச்சு

வாடாது - சோர்வடையாது

தனையே - தன்னை/சிவனை

ஈடேது - ஒப்பு ஏதும் இல்லை

No comments:

Post a Comment